Tuesday, 3 January 2012

இழப்பு


 
புயல் வீசிய பொழுதுகள் எல்லாம்
பூந்தென்றலாய் உன் முகம்.....

வாழ்க்கைப் போராட்டத்தில் 
வழிகாட்டியாய் உன் முகம்.....

துயரங்களில் தத்தளித்த காலங்களில் 
கலங்கரை விளக்காய் 
உன் முகம்..

கட்டுபாடற்று திரிந்த தருணங்களில் 
கடிவாளமாய் உன் முகம்...

இருள் நிறைந்த நேரங்களில்
அகல் விளக்காய் உன் முகம்...

 எத்தனையோ சோதனைகளில் 
உன் முகம் நினைந்து ஆறுதல் அடைந்தேன்...

இன்று 

மறக்க நினைக்கிறேன் 
மரணப் படுக்கையில் இருந்த 
உன் முகத்தை..........

அன்புடன்
நிலா 
 

No comments:

Post a Comment

உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன !